செவ்வாய் கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிரங்கியதாக அதிகாரப்பூர்வமாக சினா அறிவித்துள்ளது.
விண்வெளி ஆய்வுகளில் ஆதிக்கம் செலுத்திவரும் நாடுகளில் சீனாவும் ஒன்று. கடந்த ஆண்டு ஜுலை மாதம் தியான்வெந்1 விண்கலத்தை சீனா செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் கடந்த பிப்ரவரி மாதம் நுழைந்தது.
இந்நிலையில் தற்போது இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. செவ்வாய்கிரகத்தில் பல ஆய்வுகளை செய்யவுள்ள தியான்வென்-1 விண்கலமானது 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் செவ்வாய் கிரகத்தில் சீன விண்கலம் ஒன்று தரையிறங்கி இருப்பது குறிப்பிடதக்க சாதனையாக கருதப்படுகிறது.