இலங்கை

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த தூபி நேற்று புதன்கிழமை இரவு உடைக்கப்பட்டுள்ளது. 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்த நிலையிலேயே நினைவு தூபி உடைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இம்முறை புதிதாக நாட்டுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த 6.5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பொது நினைவுக்கல்லும் திருடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று ஆரம்பமான நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நாட்டுவதற்காக, பொது நினைவுக்கல் நேற்று நினைவு முற்றம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

அதனை அடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு நினைவுக்கல் கொண்டு வந்தவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அந்நிலையில் நேற்று இரவு முழுவதும் இராணுவ , பொலிஸ் குவிக்கப்பட்டு நினைவு முற்றம் பகுதிக்கு எவரும் உட்செல்ல முடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் காலை அப்பகுதிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பை சேர்ந்தவர்கள் சென்ற போது நினைவு முற்றத்தில் இருந்த நினைவு தூபி அடித்து உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

“மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” என்பதை, அரசுக்குள்ளே இருக்கும் தமிழர்கள் ஜனாதிபதிக்கு கூற வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று காலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் கடுமையாக உள்ள கொரோனா தொற்றின் 2வது அலை நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிரங்கியதாக அதிகாரப்பூர்வமாக சினா அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுக்கள் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. மத்திய கூட்டாட்சி அரசு இம்மாத இறுதியில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க ஆலோசித்துள்ளது.