தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று காலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் தமிழகத்தில் பாதிப்பு உச்சம் அடைந்துவருகிறது. இதனால் பரவலை கட்டுப்படுத்த கடந்த 10ந் திகதி முதல் வருகிற 24 ஆம் திகதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
எனினும் கொரோனா பரவல் அதிகரிக்கின்றமையால் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று சென்னையில் நடைபெற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவ வல்லுனர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திதினார். இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு ஊரடங்கு அமலாக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.