விளையாட்டு

நேற்று ஜூன் 15ம் திகதி நடைபெற்ற உலக கோப்பை கால் பந்து போட்டிகளில் ஸ்பெயின் - போர்த்துக்கல் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டி 3-3 என சமநிலையில் முடிவடைந்தது.

இதில் போர்த்துக்கல் சார்பில் மூன்று கோல்கள் அடித்த ரொனால்டொ புதிய இரு உலக சாதனை படைத்தார். உலக கோப்பை, ஐரோப்பிய கோப்பை, அமெரிக்க கோப்பை உட்பட உலகின் மிக முக்கிய 8  காற்பந்து தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார். அதோடு தொடர்ந்து நான்கு உலக கோப்பை தொடரில் கோல் அடித்த நான்காவது வீரர் எனும் பெருமையும் அவருக்கு கிடைத்தது. முன்னதாக பேலே, ஸீலர், குலோஸ் ஆகியோர் இப்பெருமையை பெற்றிருந்தனர். 2006 ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகளிலிருந்து ரொனால்டோ விளையாடுகிறார்.

நேற்றைய போட்டியில் ஸ்பெயின் அணி சார்பில் டியோகோ கோஸ்டா இரு கோல்களையும் நாச்சோ ஒரு கோலையும் அடித்தனர். ரொனால்டோ ஒரு பெனால்டி கோல், ஒரு ஃபிரீகிக்  கோக் மற்றும் ஒரு ஸ்டிரைக் கோல் என்பவற்றை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

ஸ்பெயின் வெல்லும் சந்தர்ப்பம் இருந்த போதும், ரொனால்டோவை பல முறை அவதானமின்றி தாக்கி வீழ்த்தியும், கோல் கீப்பரின் அசாதாரன தடுப்பு ஒன்றின் மூலம் இப்போட்டியை சமநிலையையாக்கியது போர்த்துக்கல்.

இதேவேளை நேற்று இடம்பெற்ற மொரோக்கோ - ஈரான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் இறுதி வினாடியில் Own Goal ஒன்றை மொரோக்கோ அணியினர் அடித்ததால், ஈரான் வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக கோப்பை தொடர் ஒன்றில் இரண்டாவது தடவையாக ஈரான் வெற்றி ஒன்றை பெற்றுள்ளது.

இதேவேளை எகிப்து - உருகுவே அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் உருகுவே அணி 1 - 0 என வெற்றி பெற்றது. 89 வது நிமிடத்தில் ஜோசே கிமெனேஸ், அந்த அணிக்காக கோல் அடித்தார்.

இன்று ஜுன் 16ம் திகதி நாளை  போட்டிகள் நடைபெறுகின்றன. பிரான்ஸுடன் மோதுகிறது ஆஸ்திரேலியா. ஆர்ஜெண்டீனாவுடன் மோதுகிறது ஐஸ்லாந்து அணி. பெருவுடன் மோதுகிறது டென்மார்க் அணி. குரோஷியாவுடன் நைஜீரியா மோதுகிறது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.