விளையாட்டு

5-0 என வரலாற்று வெற்றி!

இன்று ஜூன் 14ம் திகதி கோலாகலமாக ரஷ்யாவில் தொடங்கிய உலக கோப்பை காற்பந்து தொடரில் முதலாவது போட்டியில் சவுதி அரேபிய அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷ்ய அணி வெற்றி பெற்றுள்ளது.

இவ்வெற்றியின் மூலம், போட்டியை நடத்தும் அணி, முதல் போட்டியில் தோல்வியை அடைந்ததே இல்லை எனும் சாதனை தொடர்கிறது. இதுவரை FIFA நடத்தியுள்ள 21 உலக கோப்பை தொடர்களிலும் போட்டியை நடத்தும் நாடு, முதல் போட்டியில் தோல்வியை அடைந்ததில்லை. 

அதோடு, உலக கோப்பை முதல் போட்டி ஒன்றில் போட்டியை நடாத்தும் அணி அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறும் இரண்டாவது தடவை இதுவாகும்.1934ம் ஆண்டு இத்தாலி அமெரிக்காவுக்கு எதிராக 7-1 என வெற்றி பெற்றதே சாதனையாக இருந்து வருகிறது.

கடந்த 2014 உலக கோப்பை தொடரில் ரஷ்ய அணி மொத்தமாக 2 கோல்களையே வென்றிருந்தது. இம்முறை முதல் போட்டியிலேயே 5 கோல்களை தனதாக்கியுள்ளது.

1800 மைல்கள் வித்தியாசத்தில் மைதானங்கள்

மொத்தமாக 32 அணிகள் பங்குபெறும் இம்முறை உலக கோப்பை தொடர் 32 நாட்கள் நடைபெறவுள்ளது. 12 மைதானங்களில் போட்டி நடைபெறுகின்றன. 11 நகரங்களில், சுமார் 1800 மைல்கள் வித்தியாசத்தில் ஒவ்வொரு மைதானமும் அமைந்துள்ளன.

ஜேர்மனியா, பிரேசிலா?

நடப்பு சாம்பியனான ஜேர்மனி இம்முறையும் கோப்பையை தனதாக்கினால், 1962ம் ஆண்டுக்கு பிறகு இரு வருடங்கள் தொடர்ந்து உலக கோப்பையை வென்ற அணி எனும் பெருமையை பெறும். பிரேசில் இம்முறை உலக கோப்பையை கைப்பற்றினால், ஆறாவது தடவையாக சாம்பியனாகும் பெருமையை பெறும்.

யார் பலம் வாய்ந்த அணிகள்?

மிகப் பலம் வாய்ந்த அணிகளாக ஜேர்மனி, பிரேசில், 2016ம் ஆண்டு யூரோ சாம்பியன் போர்த்துக்கல், 2014ம் ஆண்டு உலக கோப்பை ரன்னஸ்-அப் சாம்பியன் ஆர்ஜெண்டீனா, பெல்ஜியம், போலந்து, மற்றும் பிரான்ஸ் அணிகள் திகழ்கின்றன.

முதன்முறை உலக கோப்பை தொடரில் விளையாடும் புதிய அணிகள்

பனாமா மற்றும் ஐஸ்லாந்து அணிகள் தமது முதலாவது உலக கோப்பை தொடரில் விளையாடுகின்றன.

1982ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பெரு இம்முறை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. எஜிப்து மற்றும் மொரோக்கோ ஆகிய வட ஆபிரிக்க நாடுகளும் நீண்ட காலத்திற்கு பிறகு உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

தகுதியே பெறாத சாம்பியன் அணிகள்!

நான்கு தடவை உலக கோப்பை சாம்பியனான இத்தாலி, தென் அமெரிக்க சாம்பியனான சிலி மற்றும் ஆபிரிக்க பலம் வாய்ந்த அணியான கெமரூன் ஆகியன இம்முறை உலக கோப்பை தொடருக்கு தகுதியே பெறவில்லை.

கிரிக்கெட்டை போன்று காற்பந்திலும் 3rd Umpaire?

முதன்முறையாக VAR எனப்படும் காணொளி உதவியுடன் தவறுகளை கண்டுபிடிக்கும் நுட்பம் இம்முறை பயன்படுத்தப்படவிருக்கிறது. முக்கியமாக ஒரு அணிக்கு பெனால்டி கோல் அடிக்கும் வாய்ப்பை வழங்குவதா இல்லையா என்பது இனிமேல் தேவைப்பட்டால் VAR உதவியுடன் முடிவெடுக்கப்படும்.

- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.