விளையாட்டு

இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் போட்டி ஒன்றில் சென்னை, பஞ்சாப் அணிகள்  இன்று மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது. அதிரடியாக விளையாடி வந்த கெயில் 33 பந்துகளில் 63 ரன்கள் (7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) எடுத்து வாட்சன் பந்தில் கேட்ச் ஆனார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி. துடுப்பாட்டத்தின் ஒரு கட்டத்தில் 5 ஓவர்களில் சென்னை அணியின் ஸ்கோர் 46 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளாக இருந்தது. பின்னர் 6 வது ஓவரை வீசிய அஸ்வின், பில்லிங்ஸை எல்பிடபுள்யூ ஆக்கி வெளியேற்றினார்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி, ராயுடு வுடன் கை கோர்த்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 49 ரன்கள் எடுத்திருந்த அம்பதி ராயுடு 13 வது ஒவரின் 4 வது பந்தில் ரன் அவுட் ஆகி தனது அரை சதத்தை தவற விட்டார். பின்னர் தோனியுடன் ஜடேஜா இணைந்தார். கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி வெற்றி பெற 76 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்த நிலையில் 17 வது ஓவரின் 5 வது பந்தில் தோனி தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

18 வது ஓவரின் 2 வது பந்தில் ஜடேஜா  வெளியேறினார். தொடர்ந்து கடைசி 6 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரில் 13 ரன்களே எடுத்த சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேப்டன் தோனி 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.


மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.